தன்னுடன் பேசுவதை நிறுத்தியதால் இளம்பெண் மீது ஆசிட் அடித்த இளைஞர் உத்திரபிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய காலத்தில் இளம்பெண்கள் இளைஞர்களுடன் நட்பாக பழகுவதும் காதல் வயப்பட்டு பேசுவதும் வழக்கமாக இருக்கிறது. ஆனால் அந்த உறவு முறிந்து விடும் பட்சத்தில் சில ஆண்கள் கண்மூடித்தனமான கோபத்தில் தவறான முடிவுகளையும் எடுத்து விடுகின்றனர். சிலர் தங்களை தாங்களே மாய்த்து தற்கொலை செய்து கொள்கின்றனர். பலர் விலகிச் சென்ற பெண்களை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் கொலை வரை சென்று விடுகின்றனர். அதுபோல உத்திரபிரதேச மாநிலத்தில் ஹப்பூர் எனும் பகுதியில் நேற்று இரவு ஏழு முப்பது மணி அளவில் திடீரென வீட்டுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் அங்கு இருந்த இளம்பெண் மீது ஆசிட் வீசியுள்ளார். இதில் அந்தப் பெண்மிகவும் காயமடைந்த நிலையில் மீரட் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து அந்த பெண்ணின் தந்தை இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இப்பிரச்சனை குறித்து விசாரித்ததில், இளம்பெண்ணுக்கு ஆசிட் அடித்த இளைஞனும் அந்தப் பெண்ணும் சிறிது காலம் நட்பாக பழகி வந்ததாகவும் அதன் பின்பு அந்தப் பெண் அந்த இளைஞனுடன் பேசுவதை நிறுத்தி விட்டதால் கோபத்தில் அந்த இளைஞர் பெண் மீது ஆசிட் வீசியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. தற்பொழுது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் பேசவில்லை எனும் ஒரு காரணத்திற்காக பெண் மீது இளைஞன் ஆசிட் அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Election2024: பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முதல் கட்டம் கடந்த 19ம் தேதி…
Ghilli : கில்லி படத்தில் முதலில் தங்கை கதாபாத்திரம் கிடையாது தம்பி கதாபாத்திரம் தான் இருந்தது என சதீஷ் ஸ்டீபன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குனர் தரணி…
supreme court: ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மக்களவை தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும்…
Congress Manifesto : காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி குறித்து இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சி…
Kerala: ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேரளா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…
Aparna Das Marriage: மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த…