வரலாற்றின் அருவருப்பான மற்றும் மோசமான ஜனாதிபதி ஜோ பைடன் தான் – அதிபர் டிரம்ப்!

வரலாற்றின் அருவருப்பான மற்றும் மோசமான ஜனாதிபதி ஜோ பைடன் தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களுக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் வருகிற 3ம் தேதி நடைபெறக்கூடிய ஜனாதிபதி தேர்தலுக்காக தீவிரமான பிரச்சாரத்தில் ஜனாதிபதி அவர்கள் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் குடியரசு கட்சி சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற பிரச்சார பேரணியில் பேசிய அதிபர் டிரம்ப் அவர்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பைடன் அவர்கள் நிறுத்தப்பட்டதற்கு கடுமையான விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே மிக மோசமான ஜனாதிபதி ஜோ பைடன் தான் எனவும், அவர் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டது நம்பமுடியாதது மட்டுமல்லாமல் அருவருப்பானது மற்றும் அவமானகரமானது எனவும் கூறியுள்ளார். மேலும் அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் நாட்டை அவர் வழி நடத்தாமல் தீவிர இடதுசாரிகள் தான் நாட்டை வழிநடத்துவார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் சீனாவுக்கு ஆதரவாக அவரது வெற்றி அமையும் எனவும், சீனாவின் அச்சுறுத்தல் அதிகரிக்கும் எனவும், வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த சீனாவுக்கு எதிராக தான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்ததாகவும் இதனால் விவசாயிகளுக்கு உதவும் முடிந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் ஜோ பைடன் வெற்றி பெற்றால் சீனா மீதான வரிகளை அவர் நீக்கி விடுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal