பொன்ராதாகிருஷ்ணனிடம் ‘ஸ்டாலின் தான் முதல்வராக வேண்டும்’ எனக் கூறிய பெண்மணி…! மறுபேச்சு பேசாமல் காரில் ஏறிய பொன்னார்….!

பொன்ராதாகிருஷ்ணனிடம் ‘ஸ்டாலின் தான் முதல்வராக வேண்டும்’ எனக் கூறிய பெண்மணி…! மறுபேச்சு பேசாமல் காரில் ஏறிய பொன்னார்….!

பொன்ராதாகிருஷ்ணனிடம் ‘ஸ்டாலின் தான் முதல்வராக வேண்டும்’ எனக் கூறிய பெண்மணி. 

மதுரையில் இன்று சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி கோவிலில், பக்தர்கள் வழிபாடு மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பொன்ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று காலை, மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

பின் செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்துவிட்டு புறப்பட்ட, பொன்ராதாகிருஷ்ணனிடம் ‘ஸ்டாலின் தான் முதலமைச்சர் ஆக வேண்டும்’ என ஒரு பெண்மணி கூறியுள்ளார். அதற்கு அவர், மீனாட்சி அம்மனிடம் கேளுங்கள் என கூறியுள்ளார். அதற்கு அந்த பெண்மணி, தான் மீனாட்சி அம்மனிடம் வேண்டிவிட்டு தான் வருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து, அவர் மறுபேச்சு பேசாமல் காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube