அவசர கால கதவை திறந்து விமான றெக்கையில் அமர்ந்து காற்று வாங்கிய பெண்!

அவசர கால கதவை திறந்து விமான றெக்கையில் அமர்ந்து காற்று வாங்கிய பெண்!

உக்ரைனில் அவசர கால கதவை திறந்து விமான றெக்கையில் அமர்ந்து காற்று வாங்கிய பெண்.

துருக்கியிலிருந்து போரிஸ்பில் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த விமானம் ஒன்றில் பயணிகள் அனைவரும் கீழே இறங்குவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் இளம்பெண் ஒருவர் மட்டும் விமான றெக்கையின் மீது சாவகாசமாக அமர்ந்து கொண்டு காற்று வாங்கி கொண்டு இருந்து உள்ளார். இதனை கண்ட விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக அந்த பெண்ணை அங்கிருந்து வெளியேற்றிய அதிகாரிகளிடம் விசாரித்தபோது விமானத்திற்குள் புழுக்கமாக இருந்ததால் காற்று வாங்க அங்கு சென்றதாக கூறியுள்ளார். விமானத்தின் அவசர கால கதவை திறந்து றெக்கை பகுதியில் அமர்ந்து காற்று வாங்கிய அந்த பெண்ணிற்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube