கள்ள காதலனுக்கு வீடியோவில் கடைசி முத்தம் கொடுத்து தற்கொலை செய்துகொண்ட பெண்!
கள்ள காதலனுக்கு வீடியோவில் கடைசி முத்தம் கொடுத்து தற்கொலை செய்துகொண்ட பெண்!
காரைக்குடி அருகே கள்ளக்காதலன் பேச மறுத்ததால் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி பர்மா காலணிகள் தனி வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். ராஜேஸ்வரிக்கும் அந்த பகுதியில் உள்ள பிரபுதேவா என்பவருக்கும் வாட்ஸ்அப் மூலம் காதல் மலர்ந்து பிரபுதேவாவுடன் குடித்தனம் நடத்தி வந்துள்ளார் ராஜேஸ்வரி. இந்நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ள ராஜேஸ்வரி கூறியதால் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு திடீர் காதலன் பிரபுதேவா தலைமறைவாகிவிட்டார்.
அவனை தொடர்பு கொள்ள இயலாததால் ஏமாற்றமடைந்த ராஜேஸ்வரி தூக்கிட்டு கொள்வது போல வீடியோ வாட்ஸ் அப்பில் அனுப்பிவிட்டு கடைசியாக தனது காதலனுக்கு மூன்று முத்தங்களையும் கொடுத்து விட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது மரணம் தொடர்பாக ராஜேஸ்வரியின் கா சகோதரர்கள் அளித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான கள்ளக்காதலன் பிரபுதேவாவை வலைவீசி தேடி வருகின்றனர்.