கள்ளக்காதலனுடன் கணவனை கொன்று கட்டிலுக்கடியில் புதைத்த மனைவி!

ஒன்றாக மது அருந்திவிட்டு, கள்ளக்காதலனுடன் கணவனை கொன்று கட்டிலுக்கடியில் புதைத்த மனைவி மற்றும் காதலன் கைது.

கொல்கத்தாவின் வடக்கிலுள்ள பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 38 வயதுடைய பெண்ணான ஸ்வப்னா என்பவர் அவரது காதலன் சுஜித் தாஸ் என்பவருடன் சேர்ந்து கணவரை கொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூங்கில் தண்டின் கீழ் இரத்தக்கறை காணப்பட்டதால் அந்த பகுதியில் வசிக்கக்கூடிய கிராமவாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  இழுபட்டு சென்றது போன்று அடையாளம் இருப்பதால் அதை நோக்கி சென்றுள்ளனர். ஆனால், அடையாளம் தெரியவில்லை எனவே சந்தேகத்திற்கிடமான ஏதேனும் தென்பட்டால் தெரிவிக்குமாறு கூறிவிட்டு போலீசார் சென்றுள்ளனர்.
இந்நிலையில் ஒரு பூட்டப்பட்ட வீட்டின் முன்பதாக இரத்த கறைகள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த வீட்டை உடைத்து பார்த்தபோது படுக்கையின் கீழ் மணல் குவிக்கப்பட்டு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். அதன்பின் அங்கு சோதனை மேற்கொண்ட போது அங்கு ஒரு சடலம் புதைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலத்தை எடுத்து பிரேதப் பரிசோதனை செய்தபோது அதில் பல குத்துக் காயங்கள் இருந்துள்ளது. இதுகுறித்து விசாரித்த பொழுது 42 வயதான ராமகிருஷ்ணா சர்கர் என்பவர்தான் இந்த உயிரிழந்த சடலம் என கிராமவாசிகள் அடையாளம் கண்டு கூறியுள்ளனர்.
விசாரணையில் ராம் கிருஷ்ணாவின் மனைவிக்கு சுஜித் என்பவருடன் கள்ளக்காதல் இருந்ததால் சம்பவத்தன்று ராமகிருஷ்ணா ஸ்வப்னா சுஜித் ஆகிய மூன்று பேருமே ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அதன் பின்பு கள்ளக்காதலனுடன் இணைந்து தனது கணவரை  ஸ்வப்னா கொலைசெய்து கட்டிலுக்கு அடியில் புதைத்தது தெரிய வந்துள்ளது. கள்ளக்காதலன் சுஜித் மற்றும் ஸ்வப்னாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
Rebekal

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

1 hour ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

3 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

5 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

6 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

6 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

6 hours ago