இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்திருந்தது தமிழர்களுக்கு செய்த துரோகம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு செய்யூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அக்கட்சி தலைவர் திருமாவளவன், முள்ளிவாய்க்கால் ஈழ இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சேவை சர்வதேச குற்ற புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்தப்படும் வகையில் சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்துவதற்கு ஆதரவான தீர்மானத்திற்கு இந்தியா வாக்களித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த கும்பல் ராஜபக்சேவை காப்பற்றுவதற்காக, இலங்கை அரசுக்கு ஆதரவாக, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்காமல், இந்தியா புறக்கணிப்பு செய்திருக்கிறது. இதுதான் பாஜக தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறி, இந்தியாவின் வெளிநடப்பு தமிழர்களுக்கு செய்த துரோகம் என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேற்று இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நிறைவேறியது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை 22 நாடுகள் ஆதரித்தும், 11 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்திருந்தது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா, நேபாளம், ஜப்பான், இந்தோனோஷியா உள்ளிட்ட 14 நாடுகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Aparna Das Marriage: மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த…
Priyanka Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதில் கூறியுள்ளது.…
ஐபிஎல் 2024: நேற்றை நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியளித்தார். கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய…
Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி…
LokSabha Elections 2024: மக்களவை 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 24) முடிவடைகிறது. கேரளா,…
Summer Holiday: தமிழகத்தில் இன்று முதல் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக நடந்து…