36 மணி நேரத்தில் கிராமத்தில் இருந்து உலகிற்கு பரவும் வைரஸ்! சௌமியா சுவாமிநாதன் அதிர்ச்சி தகவல்!

இன்றை கால சூழலில் ஒரு வைரஸ் 36 மணி நேரத்தில் உலகிற்கு பரவிடும் என உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி தகவல்.

இன்றைய நிலவரப்படி, ஒரு வைரஸானது தொலைதூர கிராமத்தில் இருந்து 36 மணி நேரத்திலேயே உலகம் முழுவதும் பரவும் நிலை உள்ளது என உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

புவி வெப்பமடைதல், காடழிப்பு, நகரமயமாக்கல், காடு மற்றும் வீட்டு விலங்குகளின் தொடர்பு, சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவை வைரஸ் பரவுவதற்கு வழிவகை செய்கிறது எனவும் குறிப்பிட்டார். எங்களால் இதனை நிறுத்த முடியாது. இது மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்று நான் நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment