ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர் ஏற்றி கொண்டு ரயில் புறப்பட்டது!

ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப் படுகிறது. சென்னையில் ஏற்பட்டு உள்ள கடும் குடிநீர் தட்டுப்பாட்டு காரணமாக ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல தமிழக அரசு ரூ .65 கோடி நிதி ஒதுக்கியது.

இதற்கான பணிகளை கடந்த 22-ம் தேதி தொடங்கியது. ஜோலார்பேட்டையில் உள்ள மேட்டு சக்கரகுப்பம் பகுதியில் உள்ள ஒகேனக்கல்  கூட்டு குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ரயில் நிலையத்திற்கு ராட்சத  குழாய் மூலம் தண்ணீர் எடுத்து செல்லப்பட்டு அங்கு 50 வேகன்கள் கொண்ட ரயில் மூலமாக சென்னைக்கு தண்ணீர்  கொண்டு வரப்படுகிறது.

70 ஆயிரம் லிட்டர் கொண்ட ஒரு வேகன்களில் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நிரப்பட்டு  50 வேகன்கள் மூலம் கொண்டு வர உள்ளது. இன்று காலை 7 மணிக்கு  ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் புறப்பட்டது.சென்னைக்கு மதியம் 1 மணிக்கு ரயில் வந்தடையும் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்காக இரண்டு ரயில்கள் ரயில்வே அதிகாரிகள் ஒதுக்கி உள்ளனர்.ஒரு ரயில் இருமுறை ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் அடுத்து செல்லும்.

author avatar
murugan