வசந்தகுமார் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது – துணை முதல்வர்

வசந்தகுமார் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி முகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது என்று துணை முதல்வர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கொரோனாவ வைரசால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதல்வரை தொடர்ந்து தமிழக துணை முதல்வர், வசந்தகுமார் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி முகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது என்று அவரது ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது பதிவில், கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபருமான திரு.எச்.வசந்தகுமார் அவர்கள் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பகிர்ந்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்