அருமை…ரூ.37 கோடியில் கடல்சார் நடைபாலம் – ஒப்பந்த புள்ளி கோரிய தமிழக அரசு

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவுப் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் ரூ.37 கோடியில் கடல்சார் நடைபாலம் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

இது தொடர்பாக,அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கன்னியாக்குமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் அய்யன் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கடல் பாலம் கட்டுவதற்கான ஒரு திட்டத்தைச் செயல்படுத்த,டெண்டர் 04.05.2022 14.00 மணி வரை ஆன்லைன் மூலம் மட்டுமே திருநெல்வேலி வட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளர் (H), C&M மூலம் பெறப்படும்.

பணிகளின் விவரங்கள்,பணிகளின் தோராயமான மதிப்பு, EMD, டெண்டர் ஆவணங்களின் இருப்பு மற்றும் அனைத்து விவரங்களும் 14.03.2022 முதல் அரசு இணையதளத்தில் https://tntenders.gov.in/ இல் கிடைக்கும்.டெண்டரில் ஏதேனும் மாற்றங்கள் / திருத்தங்கள் இருந்தால்,அது அரசு இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.