நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை மிக அதிகளவில் பரவியதுடன், அதிகப்படியான பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா இரண்டாம் அலையால் அதிகபட்சமாக நாளொன்றுக்கு 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கொரோனா மூன்றாம் அலை இந்தியாவில் விரைவில் வரவுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதுடன் இந்த மூன்றாம் அலையில் அதிகளவில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்வது எப்படி என்பதற்கான ஆலோசனை கூட்டத்தை முதல்வர் அரவிந் கெஜ்ரிவால் காணொலி மூலமாக நடத்தியுள்ளார்.
அப்பொழுது பேசிய அவர், கொரோனா மூன்றாம் அலையில் நாளொன்றுக்கு 37 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்புகள் ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளதாகவும், இதனை எதிர்கொள்ளும் விதமாக டெல்லியில் 64 ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைகள் நிறுவப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும், புதியவகை வைரஸ்களை கண்டறிய இரண்டு ஆராய்ச்சி கூடங்களும் அமைக்கப்படும் என கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், கொரோனா இரண்டாம் அலையை விட மூன்றாம் அலை உக்கிரமாக இருக்கும் எனவும், இதில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளதால் இதனை தவிர்ப்பதற்காக ஆலோசனை குழு அமைக்கவும், தேவையான மருத்துவக்கட்டமைப்பை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
Election2024: தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக நாளை…
Air Force Plane Crash: ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே…
Ghilli Re Release: தளபதி விஜய்யிடம் கில்லி திரைப்பட விநியோகஸ்தர் வைத்த கோரிக்கையை ஏற்றதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்கும்…
Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…