டான் படத்தால் “மாநாடு” படத்துக்கு வந்த சிக்கல்..!

எஸ் ஜே சூர்யா சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தில் நடித்து வருவதால் மீண்டும் மாநாடு படத்தில் அவர் நடிக்க சில நாட்கள் ஆகும். 

நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . மாநாடு படத்தில் சிம்பு இஸ்லாமிய இளைஞனான அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் மாநாடு படத்தின் டீசர் வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது பிரமாண்ட அரசியல் படமாக உருவாகும் இந்த மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது .அதற்காக சென்னை பிலிம் சிட்டியில் அரசியல் மாநாடு போன்ற பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் ,அதில் அனைத்து கதாபாத்திரங்களையும் வைத்து படமாக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ள நிலையில், இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் எஸ் ஜே சூர்யா சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தில் நடித்து வருவதால் மாநாடு படத்தில் அவரது காட்சியை படமாக்க இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதால் மாநாடு படத்திற்கான படப்பிடிப்பு முழுவதுமாக முடிய இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதால் ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் உள்ளார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.