கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்..!

கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்..!

கேரள மாநிலத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு தமிழக எல்லையில் இ-பாஸ்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்ததையடுத்து மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு காரணமாக தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கியுள்ளது.

இருந்தபோதிலும், கோவையில் தொற்று பாதிப்பு எதிர்பார்த்த வகையில் குறையாத காரணத்தால், கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றது.

கேரளாவை ஒட்டியுள்ள 13 தமிழக எல்லைகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் இருந்து வரும் ரயில் பயணிகளின் சோதனையும் போத்தனூர், கோவை ரயில்வே நிலையங்களில் செய்யப்படுகிறது.

Join our channel google news Youtube