குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கு:தேர்தல் ஆணையம் நாளை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கு:தேர்தல் ஆணையம் நாளை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

  • தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு
  • உச்சநீதிமன்றம்  இடைக்காலத்   தடை
  • தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு
  • தேர்தல் ஆணையம் நாளை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கமுடியுமா என தேர்தல் ஆணையம் நாளை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு:

Image result for குக்கர் சின்னம்

டில்லி உயர் நீதிமன்றம், டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் இதை எதிர்த்து ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ்.,மதுசூதனன் ஆகியோர் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

உச்சநீதிமன்றம்  இடைக்காலத்   தடை:

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,  டி.டி.டி. தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கி டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு இடைக்காலத்   தடை விதித்தது.

தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு:

Image result for குக்கர் சின்னம்

பின்  அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக தங்களுக்கே ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என டிடிவி.தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தேர்தல் ஆணையம் நாளை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு:

இந்நிலையில் இனிவரும் தேர்தல்களில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கமுடியுமா என தேர்தல் ஆணையம் நாளை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *