நில பிரச்சனைகளை தீர்க்க தனிச்சட்டம்.! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.!

நிலப்பிரச்னைகளை தீர்க்க தமிழக அரசு தனிச்சட்டம் கொண்டுவரவேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் நில பிரச்சனைகளை தீர்ப்பது தொடர்பாக  தமிழக அரசானது முன்வந்து, ஓர் தனிச்சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே ஆந்திர மாநிலத்தில் அம்மாநில அரசு, நிலப்பிரச்னைகளை தீர்க்க தனிச்சட்டம் வைத்துள்ளது அதே போல தமிழக அரசும் முன்னெடுக்க வேண்டும் எனவும், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நில அபகரிப்பு தொடர்பாக வெளிப்படையான விசாரணை தேவைப்படுகிறது என்றும், தனிப்பட்ட இரு நபர்களின் நிலப்பிரச்சனையில் அரசியல் தலையீடு உருவாகிறது என்றும் உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.