வீட்டை விட்டு வெளியேறுவதற்காக கல்லூரி மாணவி ஒருவர் தன்னை கடத்தி கற்பழித்ததாக பொய் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராகிய ஹைதராபாத்தில் உள்ள மெச்சால் காடிகேசர் எனும் பகுதியில் உள்ள கல்லூரி மாணவி ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் அடித்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.அதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தொடர்ந்து இது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் ஏற்கனவே பார்த்தோம்.
மூன்று நாட்கள் விசாரணைக்கு பிறகு இந்த வழக்கில் அதிர்ச்சிகரமான தகவலை கமிஷன் தெரிவித்துள்ளார்.அதாவது மாணவி கூறியது அனைத்தும் பொய் என்றும்,குடும்ப பிரச்சினைகள் காரணமாக அவள் வீட்டை விட்டு வெளியேற விரும்பியதாகவும்,அதனாலையே தான் தாயை அழைத்து தன்னை கடத்தியதாக கூறியதாகவும்,ஆனால் இதில் போலீஸ் ஈடுபட்டதன் மூலம் சற்று பயந்த மாணவி ஒரு கதையை உருவாக்கி போலீசாரிடம் கூறியதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஏற்கனவே மாணவி கூறிய விவரங்களின் படி கடத்தியதாக கூறப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அவர் தான் ஆட்டோவில் ஏறி சென்றுள்ளதுடன் ,தன்னை தானே காயப்படுத்தி கொண்டதும் தெரிய வந்தது .மேலும் அவர் கூறிய தகவலில் முரண்பாடுகள் இருந்ததை தொடர்ந்து சந்தேகமடைந்த போலீசார் மாணவியிடம் மீண்டும் விசாரணை நடத்தியதில் மாணவி பொய் கூறியதை ஒப்பு கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளார்.மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் மன்னிப்பு கோரி விடுவித்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…