தமிழகத்தில் வக்கில்கள் வேலை நிறுத்த போராட்டம் ..,

தமிழகத்தில் நேற்று வழக்கறிஞர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, போராட்டம் நடத்தினர். குமரி மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு இந்த போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்து இருந்தார்கள். இதையடுத்து நாகர்கோவிலில் நேற்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் இறங்கினர். நாகர்கோவிலில் நீதிமன்ற வளாகம் முன் வக்கீல் சங்க தலைவர் மகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வக்கில் சங்க செயலாளர் வக்கீல் மரிய ஸ்டீபன், பொருளாளர் பார்த்தசாரதி மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள், வக்கீல் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் வக்கீல்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் இடுபட்டதாக, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment