சூர்யாவின் அணுகுமுறை நன்று- வைரமுத்து.!

கவியரசு வைரமுத்து  தனது ட்வீட்டர் பக்கத்தில் சூர்யாவை பாராட்டி ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

நடிகை மீரா மிதுன் சமீபத்தில் விஜய் மற்றும் சூர்யாவை கடுமையாக விமர்சித்து பேசியதோடு, அவர்களது குடும்பத்தினரையும் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்ததார். இதற்கு ரசிகர்கள் மீராவை கடுமையாக விளாசி வந்த நிலையில் நேற்றைய தினம் நடிகர் சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில்  தனது ரசிகர்களுக்கு ஒரு பதிவு ஒன்றை பதிவு செய்தார் அதில் “எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள் என கூறியிருந்தார்.

சூர்யா கூறிய இந்த கருத்துக்காக பலதரப்பில் இருந்து அவருக்கு பாராட்டு வந்தது, இந்நிலையில் அந்த வகையில் தற்பொழுது கவியரசு வைரமுத்து  தனது ட்வீட்டர் பக்கத்தில் சூர்யாவை பாராட்டி ட்வீட் ஒன்றை செய்துள்ளார், அதில் வைரமுத்து கூறியது “சுமத்தப்பட்ட பழியின்மீது சூர்யாவின் அணுகுமுறை நன்று பக்குவப்பட்டவர்கள் பதற்ற முறுவதில்லை பாராட்டுகிறேன், நதியோடு போகும் நுரையோடு கரை கைகலப்பதில்லை, என்று பதிவு செய்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.