ஆரம்பமானது ஹரியின் பரபர ஷூட்டிங் வேலைகள்.! அருண்விஜய்-33 அப்டேட்.!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் திரைப்படத்தின் ஷூட்டிங் ராமேஸ்வரத்தில் மீண்டும் தொடங்கியது.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் தனது 33வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். மேலும், நடிகர் பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு,கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா சரத்குமார்,ஜெயபாலன்,குக் வித் கோமாளி புகழ்,அம்மு அபிராமி ராஜேஷ் மற்றும் இமான் அண்ணாச்சி போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த மார்ச் 14-ஆம் தேதி பழனியில் தொடங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டியில் படத்திற்கான விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில்,  இயக்குனர் ஹரிக்கு திடீரென கடும் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் படப்பிடிக்கு அப்படியே நிறுத்திவைக்கப்பட்டது.

அதன் பிறகு கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் படத்திற்கான படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் படத்திற்கான டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி குறித்த அப்டேட் வெளியீடபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.