பிரதமர் மோடியின் உருவத்தை போல உண்டியல் செய்த சிற்பி…!

பிரதமர் மோடியின் உருவத்தை போல உண்டியல் செய்த சிற்பி.

பீகார் முசாபர்பூரைச் சேர்ந்த ஒரு சிற்பி பிரகாஷ், பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை போல உண்டியல் செய்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் பிரகாசுக்கு இந்த புதிய யோசனை எழுந்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து கூறிய பிரகாஷ், பிரதமர் மோடி நாட்டை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக உணர்ந்தேன். எனவே பணத்தை மிச்சப்படுத்த இதை செய்ய முடிவு செய்தேன். மேலும் இந்த உண்டியலில் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள பணத்தை நாணயமாக அல்லது தாளாக சேமிக்க முடியும் இந்த உண்டியல் செய்ய அவருக்கு ஒரு மாதம் பிடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இதை தயாரித்த உடன் நான் அதை சந்தையில் விற்க ஆரம்பித்தேன். உலகை சிறந்தவரான நமது பிரதமரை பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்கவும் இது பயன்படுத்தப்படலாம் என்றும், எனக்கு இதுவரை எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை என்றும் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.