அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஒரே இணைய முகவரி!ரூ.50 லட்சம் செலவில் உருவாக்கப்படும்! அமைச்சர் மணிகண்டன் அறிவிப்பு

தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் மணிகண்டன் வெளியிட்டார்.அந்த அறிவிப்பில்,வருடந்தோரும்  தகவல் தொழில்நுடப வளர்ச்சிக்காக  வழங்கப்பட்டு வந்த நிதி ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்படும்.

அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஒரே இணைய முகவரி உருவாக்கப்படும்.இதற்காக  ரூ.50 லட்சம் செலவில் புதிய வலைதளம் ஏற்படுத்தப்படும்.ஒரே இணைய முகவரியை நினைவில் கொண்டு அனைத்து சேவைகளையும் பெற்று பயன்பெறலாம்.தமிழக அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஒற்றை கைபேசி செயலி உருவாக்க ரூ.50 லட்சம் ஒதுக்கப்படும் என்றும்  அமைச்சர் மணிகண்டன் அறிவிப்பு  வெளியிட்டார்.