அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிப்பேன் – தேசிங்கு பெரிய சாமி..!!

அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிப்பேன் – தேசிங்கு பெரிய சாமி..!!

என்னுடைய அடுத்த படம் குறித்து பரவும் செய்திகள் உண்மையில்லை என்று இயக்குனர் தேசிங்கு பெரிய சாமி ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தை இயக்கு அறிமுமானவர் இயக்குனர் தேசிங்கு பெரிய சாமி. இந்த திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, ரஜினிக்காக ஒரு கதை தயார் செய்ததாகவும், அந்தக் கதையை ரஜினியிடம் சொல்லி சம்மதம் வாங்கியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.

நடிகர் ரஜினி காந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக சன்பிக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிப்பதாவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது இயக்குனர் தேசிங்கு பெரிய சாமி அடுத்த படம் குறித்த தகவல் குறித்த பதிவை தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் அவர் தெரிவித்திருப்பது ” என்னுடைய அடுத்த படம் குறித்து பரவும் செய்திகள் உண்மையில்லை. விரைவில் அடுத்த படம் குறித்து அறிவிப்பேன். தங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. பாதுகாப்பாக இருங்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube