கைகளை சுத்தம் செய்த பின் நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள்!

நகையை கொள்ளையடிக்க சுத்தம் செய்தபின் புகுந்த கொள்ளையர்கள்.

இந்தியா முழுவதிலும் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 97 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எப்படி சுத்தமாக இருக்க வேண்டும் கொரானா வந்துவிடக்கூடாது என சாதாரண மக்கள் அஞ்சுகிறார்களோ, அதேபோல திருடர்களும் அஞ்சுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மைதான்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அலிகர் எனுமிடத்தில் முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் சாதாரணமானவர்கள் போல நகைக் கடைக்குள் புகுந்து தங்கள் கைகளை தூய்மைப்படுத்தியுள்ளானர். அதன் பின்பும் கடை ஊழியர்களை நோக்கி துப்பாக்கியை காட்டி தங்கள் பைகளில் நகைகளை அள்ள தொடங்கியுள்ளனர். சில நிமிடங்களில் கொள்ளையர்கள் அவ்விடத்தை விட்டு பரந்துள்ளனர். பட்டப்பகலிலேயே அதுவும் கைகளை சுத்தம் செய்து அதன் பின்பு கொள்ளையடித்து சென்ற இந்த கொள்ளையர்களால் அவ்விடத்தில் பதட்டம் நிலவி உள்ளது.

author avatar
Rebekal