பெண்ணிடம் இருந்து சங்கிலியை பறித்து விழுங்கிய வழிப்பறி கொள்ளையன்…! எக்ஸ்ரேயில் கண்டுபிடித்த மருத்துவர்கள்…!

பெண்ணிடம் இருந்து சங்கிலியை பறித்து விழுங்கிய வழிப்பறி கொள்ளையன். 

மத்திய பெங்களூருவின் எம்டி தெருவில், விஜய் என்ற நபர் ஹேமா என்ற பெண்ணின் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். அப்பெண்  70 கிராமுக்கு மேல் எடையுள்ள தங்கச் சங்கிலியை அணிந்திருந்தார். அவர் இரவு 8:30 மணியளவில் மூன்று ஆண்களால் வழிமறிக்கப்பட்டார்.

அதில் விஜய் என்ற நபர் ஹேமாவின் சங்கிலியை பறிக்க முயன்றார். ஆனால் அவள் அதை ஒரு கையால் பிடித்துக் கொண்டாள். அந்த நபரின் தாக்குதலுக்குப் பின் அவர் கீழே விழுந்தாலும், அவள் அவனை சங்கிலியை பறிக்கவிடவில்லை. பின் சிறிது நேரத்தில் விஜய் ஹேமாவின் கழுத்தில் இருந்த சங்கிலியை எடுத்து  கொண்டார்.

ஆனால் அந்த தெரு குறுகிய தெரு என்பதால் பொதுமக்கள் வந்து அவரை அடிப்பதற்கு முன்பதாக அந்த சங்கிலியை விஜய் விழுங்கிவிட்டார். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கே.ஆர்.மார்க்கெட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, இன்ஸ்பெக்டர் பி.ஜி.குமாரசாமி அவரது காயங்களை பார்த்து மருத்துவமனையில் சேர்க்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதனையடுத்து விஜயை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வரை சங்கிலியைப் பற்றி போலீசாருக்கு எதுவும் தெரியாது. மேலும் அப்பெண் கூட சங்கிலி தெருவில் எங்கோ ஓர் இடத்தில் விழுந்து விட்டது என்றுதான் நினைத்தார். ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக அந்த சங்கிலி விஜய்யின் வயிற்றிலிருந்தது எக்ஸ்ரெயில் தெரியவந்துள்ளது.

ஆரம்பத்தில் அந்த பொருள் எலும்புத்துண்டு என்று போலீசார் மற்றும் மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்தார். ஆனால் போலீசார் அதை நம்பவில்லை. மேலும் சங்கிலியை வெளியேற்றுவதற்காக அவருக்கு எனிமா மற்றும் மலமிளக்கி  வாழைப்பழங்களை கொடுக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டனர். அதன்பின் சங்கிலி மலம் வழியாக வெளியே வந்தது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

12 mins ago

10th படிச்சுருக்கீங்களா ? அப்போ புலனாய்வுத்துறையில் இந்த வேலை உங்களுக்கு தான் ?

IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…

23 mins ago

படமே இல்லாத நயன்தாராவுக்கு பம்பர் வாய்ப்பு?

Nayanthara : பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நயன்தாராவுக்கு பாலிவுட்டில் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல். நயன்தாராவின் மார்க்கெட் இப்போது எப்படி இருக்கிறது என்பது…

30 mins ago

500 அரசு ஊழியர்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம்!

Election2024: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் 500 அரசு ஊழியர்கள் ஏமாற்றம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு…

47 mins ago

இந்தியாவுக்காக வாக்களியுங்கள்.! குஷ்பூவின் பதிவால் குழம்பிய பாஜகவினர்.!

Election2024 : பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ #Vote4INDIA என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் இன்று (ஏப்ரல் 19)…

57 mins ago

ஓட்டு போட முடியாமல் போனது மனசு வேதனையா இருக்கு -சூரி!

Soori  : தனது பெயர் விடுபட்டதால் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் சூரி வேதனையுடன் பேசியுள்ளார். இன்று (ஏப்ரல் 19) -ஆம் தேதி நாடு முழுவதும் மக்களவை…

2 hours ago