சட்டப்பேரவையில் இன்று தாக்கலாகிறது நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம்…!

சட்டப்பேரவையில் இன்று தாக்கலாகிறது நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம்…!

சட்டப்பேரவையில் இன்று தாக்கலாகிறது நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம்.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு எதிரான குரல் எழுந்த வண்ணம் தான் உள்ளது. மாணவி அனிதா நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டது முதல் இந்த நீட் தேர்வை ரத்து செய்யுமாறு பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், இந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட பாடில்லை. நேற்று முன்தினம், முதுநிலை மாணவர்களுக்கும், நேற்று இளநிலை மாணவர்களுக்கும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், சேலத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் நேற்று நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து ஏற்கனேவே இன்று சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது. இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேறும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube