பிட்ச்சை சேதப்படுத்த முயன்ற அமீர், வஹாப் இருவரையும் எச்சரித்த நடுவர் !

பிட்ச்சை சேதப்படுத்த முயன்ற அமீர், வஹாப் இருவரையும் எச்சரித்த நடுவர் !

இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும்  மோதி வருகிறது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் , ரோஹித் ஷர்மா இருவரும் களமிறங்கினர்.போட்டியில் முதல் ஓவரை அமீர் வீசினார்.அந்த ஓவரில் ஒரு ரன்கள் கூட செல்லவில்லை.அமீர் மீண்டும் 5-வது ஓவரை வீசினார் அப்போது அமீர் பந்தை வீசிய பிறகு பிட்ச்யில் ஓடினார்.
பந்து வீசிய பிறகு பிட்ச்யில் ஓடினால் பிட்ச் சேதமடையும் என்பதால் நடுவர் புரூஸ் ஆக்ஸன்போர்ட் அமீருக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்தார்.பின்னர் மீண்டும் 24 ஓவரில் வஹாப் அமீரை போல பிட்ச்யில் ஓடியதால் அவருக்கும் நடுவர் மரைஸ் எராஸ்மஸ் இறுதி எச்சரிக்கை கொடுத்தார்.

author avatar
murugan
Join our channel google news Youtube