திடீரென சரிந்து விழுந்த கல்குவாரி…! உடல் நசுங்கி 2 தொழிலாளர்கள் பலி…!

திடீரென சரிந்து விழுந்த கல்குவாரி…! உடல் நசுங்கி 2 தொழிலாளர்கள் பலி…!

உத்தரமேரூர் அருகே உள்ள மதூரில் கல்குவாரி சரிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி.

உத்தரமேரூர் அருகே உள்ள மதூரில் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பகுதியில் பாறைகளை உடைக்க வெடி பொருட்களை பயன்படுத்தி உடைப்பது வழக்கம். வெடி பொருட்களை பயன்படுத்துவதால், வீடுகள் சேதம் அடைவதாக  பொதுமக்கள் குற்றம் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை அந்த கல் குவாரியில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பகுதியில் இருந்த பாறை கற்கள் திடீரென சரிந்து விழுந்தது. இதனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலரின் மீது பெரிய கற்கள் விழுந்த நிலையில், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி  தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 முதற்கட்டமாக இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube