தனியார் மருத்துவமனைகளில் ஒரு கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.250 – மத்திய அரசு

தனியார் மருத்துவமனையில் கொரோனா  தடுப்பூசி ஒரு தடுப்பூசி போடுவதற்கு ரூ.250 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கி வந்தது. தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியாவில் தடுப்பூசிகள் போடப்படுகிறது. தற்போது அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிற நிலையில், தனியார் மருத்துவமனைகளில்  தடுப்பூசி போடுவதற்கான விலை நிர்ணயம் குறித்து மத்திய அரசு நாளை அறிவிக்கும் என கூறப்படுகிறது. மேலும் தனியார் மருத்துவமனையில் கொரோனா  தடுப்பூசி ஒரு தடுப்பூசி போடுவதற்கு ரூ.250 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.