#BREAKING: ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப் 18-ல் நடைபெறும்.!

14-ஆவது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டிற்கான 14-ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பணிகளை ஐபிஎல் நிர்வாகம் தொடங்கியுள்ளது. அதன்படி, ஐபிஎல் தொடரில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதை, தொடர்ந்து  அந்தந்த அணியினர் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.

இந்நிலையில், 2021ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14-ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18-ல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். 57 வீரர்களை அணியில் இருந்து விடுவித்திருந்த நிலையில், முதல் முறையாக சென்னையில் ஏலம் நடைபெற உள்ளது இந்தியன் பிரிமியர் லீக் நிர்வாகம் தனது அதிகாரபூர்வக ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்