அவசரமாக தரையிறக்கப்பட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சென்ற விமானம்.!

அவசரமாக தரையிறக்கப்பட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சென்ற விமானம்.!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே சென்ற விமானம் அவசரமாக கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே கொல்கத்தாவிலிருந்து ஹைதராபாத் செல்லவிருந்த நிலையில், திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. நேற்று புறப்படும் போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதை கண்டுபிக்கப்பட்டதால் உடனடியாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து கொல்கத்தா விமான நிலைய இயக்குனர் கூறுகையில், கொல்கத்தாவில் இருந்து ஹைதராபாத் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக விமானம் உடனே தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர நிலைய அடைந்தது. அப்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விமானத்தில் இருந்தார் என்றும் இன்று அவர் ஹைதராபத் செல்லவுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube