வண்ணங்களோடு எல்லைக்குள் நுழைந்த புறா..! இந்திய எல்லையில் விசாரணை.!

ராஜஸ்தான் இந்திய எல்லை பகுதியில் வண்ணங்களோடு கிடைத்த புறாவால் தீவிரவாத குறியீடா..? என்ற பதற்றம் நிலவி வருகிறது.

இந்தியாவில் அமைந்துள்ள பாகிஸ்தானின் எல்லைப்பகுதியான ராஜஸ்தானில் காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பாகிஸ்தானிலிருந்து வண்ணங்களோடு புறா ஒன்று வந்துள்ளது. அப்போது காவல்துறையினர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கங்காநகர் பகுதி மக்களின் உதவியோடு அந்த புறாவை பிடித்துள்ளனர்.

புறாவின் இரண்டு இறக்கைகளிலும் வண்ணங்கள் பூசப்பட்டுள்ளது. நீளம், இளஞ்சிகப்பு, மஞ்சள் போன்ற நிறங்கள் பூசப்பட்டுள்ளது. இவை தீவிரவாதிகளின் குறியீடு போன்று இருப்பதால் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதிச்செயலில் செயல்படுகிறார்களா..? என்று காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.