வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரனை…

மத்திய அரசின் சார்பில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.
இந்த மசோதாக்களுக்கு கடந்த மாதம் 27ஆம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து இவைகள்  சட்டமாக மாறின. இந்த வேளாண் சட்டங்களுக்கு, எதிர்கட்சிகளான காங்கிரஸ், திராவிட முன்னேற்ற கழகம், இடதுசாரிகள் உள்ளிட்டவைகள்  கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வேளாண் சட்டங்கள் அரசியல் சட்டத்திற்கு எதிரானது, சட்டவிரோதமானது, செல்லாது என அறிவிக்கக்கோரி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, ராஷ்டிரீய ஜனதாதள எம்.பி. மனோஜ்குமார் ஜா, வக்கீல் மனோகர் லால் சர்மா, சத்தீஷ்கார் கிசான் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த ராகேஷ் வைஷ்ணவ் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று திங்கட்கிழமை விசாரிக்கிறது.
author avatar
Kaliraj