மது குடிக்க பணம் இல்லை…! சிசிடிவி கேமராவை திருடிய நபர்..!

சென்னையில் மதுகுடிப்பதற்காக சிசிடிவி கேமராக்களை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாவட்டம் சிட்டலபாக்கம் பகுதியில் கடந்த 4 மாதங்களாக மர்ம நபர் ஒருவர் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை திருடி சென்றுள்ளார், மேலும் இந்த திருட்டை அறிந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது, மேலும் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர், அதில் சிசிடிவி காட்சிகளை கொண்டு யார் கேமராக்களை திருடினார் என்று தெரியவந்தது.

அவர் பெயர் தங்கராஜ் என்றும் இவர் திருவிக நகரை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது, மேலும் தங்கராஜை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியபோது தங்கராஜ் கூறியது  “நான் திருவிக நகரில் வசிக்கிறேன் எனது பெயர் தங்கராஜ் எனக்கு மது குடிக்க பணம் இல்லை அதனால் தான் நான் அணைத்து கேமராக்களையும் திருடி விற்றுவிட்டேன் என்றும் கூறியுள்ளார், மேலும் தங்கராஜிடம் இருந்து போலீசார் 3 சிசிடிவி கேமராக்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.