போதைக்காக தின்னரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தவர் பரிதாபமாக பலி….!

போதைக்காக தின்னரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தவர் பரிதாபமாக பலி. 2 பேர் மருத்துவமனையில் அனுமதி. 

கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுபான பிரியர்கள் பலரும் திண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஒரகடம் அருகே குன்னவாக்கம் பகுதியில் பெயிண்டர் ஆக பணியாற்றி வருபவர் சங்கர். இவர் போதைக்காக கடந்த 3 நாட்களாக பெயிண்டில் கலக்கும் தின்னர் என்ற ரசாயனத்தி எலுமிச்சை சாற்றை பிழிந்து குடித்து வந்துள்ளார்.

 இதனை தொடர்ந்து, இவர் தன்னுடைய நண்பர்களான சிவசங்கரன், சுரேஷ், கிருஷ்ணா ஆகியோருடன் இணைந்து கூட்டாக இந்த ரசாயனத்தை குடித்துள்ளார். இதில் சங்கருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் கிருஷ்ணன் மற்றும் சிவசங்கர் ஆகியோர் சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவருடன் சேர்ந்து ரசாயனத்தை குடித்த மற்றொரு நபரான சுரேஷ் என்பவர் எங்கு இருக்கிறார் என்றே கிராம மக்களுக்கு தெரியவில்லை. அவரை வயல்காட்டில் தேடியும் கிடைக்காத காரணத்தினால், காவல்துறையினர் தற்போது அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓரகடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Tags: #Deathdinner

Recent Posts

சேலம் – ஈரோட்டில் 108 டிகிரி அளவுக்கு கொளுத்திய வெயில்…மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல்.!

Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி…

45 mins ago

இன்று மாலையுடன் ஓய்கிறது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம்.!

LokSabha Elections 2024: மக்களவை 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 24) முடிவடைகிறது. கேரளா,…

1 hour ago

மாணவர்களுக்கு இன்று முதல் ஜாலி தான்…தொடங்குகியது கோடை விடுமுறை.!

Summer Holiday: தமிழகத்தில் இன்று முதல் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக நடந்து…

2 hours ago

மீண்டும் மோதிக்கொள்ளும் குஜராத்- டெல்லி !! ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் இன்றைய 40-தாவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்அணியும், குஜராத் டைட்டன்ஸ்…

2 hours ago

CSKvsGT : சதம் விளாசிய ஸ்டோய்னிஸ்… சென்னையை வீழ்த்தி லக்னோ திரில் வெற்றி..!

IPL2024:  லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டைகளை இழந்து 213 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின்…

9 hours ago

ரச்சின் இன்னைக்கு டீம்ல இல்ல ..! டாஸ்ஸின் போது கெய்க்வாட் கூறியது இதுதான்!

Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ…

12 hours ago