டாப்சியுடன் இணைந்து அரசர் வேடத்தில் நடிக்கவிருக்கும் மக்கள் செல்வன்.! ஷூட்டிங் எப்போது தெரியுமா.?

டாப்சி நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதி பண்டைய கால அரசரராக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் சேதுபதி, தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் ‘Uppena’ படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளார் . மேலும் இவர் காத்து வாக்குல ரண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன், லாபம், இடம் பொருள் ஏவல், கடைசி விவசாயி, கா/பெ ரணாசிங்கம் உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார்.மேலும் கமலின் தலைவன் இருக்கின்றான், அமீர்கானுடன் ஒரு இந்தி படத்திலும் படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

அதனையடுத்து புகழ்பெற்ற இயக்குநரான ஆர். சுந்தர்ராஜனின் மகனான தீபா சுந்தர்ராஜன் இயக்கத்தில் டாப்சி நடிக்கும் படத்திலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜகபதி பாபு அவர்களும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் ஜெய்ப்பூரில் தொடங்கவுள்ளதாகவும், அதில் ஒரு அரண்மனையில் வைத்து வரலாற்று காட்சிகளான பிளாஷ்பேக் பகுதிகள் படமாக்கப்பட உள்ளதாகவும், இதில் விஜய் சேதுபதி பண்டைய அரசரராக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.