கரையை கடந்தது நிவர்; மின்சாரம் இல்லாததால் செம்மஞ்சேரி மக்கள் கடும் அவதி.!

நிவர் புயல் கரையை கடந்து ஆனால் நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாததால் செம்மஞ்சேரி மக்கள் கடும் அவதிபட்டு வருகின்றனர். 

நிவர் புயல் கரையை கடந்து, மழையும் நின்றுவிட்ட நிலையில் இன்னும் மின்சாரம் கிடைக்காத செம்மஞ்சேரி நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதி விரைந்து செம்மஞ்சேரி பகுதிக்கு மின்சாரம் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், கனமழையால் அந்த பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. இதனால், எலக்ட்டிரானிக் பொருட்கள் கடும் சேதம் அடைந்துள்ளன. முறையான மழை நீர் வடிகால் வசதி இல்லாததாலும் தண்ணீர் வெளியேற வழியின்றி செம்மஞ்சேரி பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால், தண்ணீர் வெளியற்றும் எந்திரங்களை கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.