அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகமல் முன்பாக பொதுமக்கள் திடீர் சாலை மறியல் …!

அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகமல் முன்பாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கஜா புயல்  தமிழகத்தை கடந்து கேரளாவிற்கு சென்று விட்டது.இருந்தாலும் தமிழகத்தில் பல பகுதிகளில் பாதிப்புகள் அதிகம் உள்ளது.

இந்நிலையில் கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட ஊர்களில் ஓன்று  தஞ்சை மாவட்டத்தில் உள்ள  அதிராம்பட்டினம்.இன்று காலை அதிராம்பட்டினத்தில் பொதுமக்கள்  சாலைமறியலில் ஈடுபட்டனர். அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகம் முன் கிழக்கு கடற்கரை சாலையில் மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்ணீர்கூட கிடைக்கவில்லை ,உண்ண உணவில்லை , உடுத்த உடையில்லாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.அதிகாரிகள் உடனே நேரில் வந்து சேத பகுதிகளை பார்வையிடவும் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Comment