“சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்”- எஸ்.டி.பி.ஐ கட்சி போராட்டம்…!

சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைமையகத்தில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

கடந்த 2019 இல் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. இதனையடுத்து,குடியுரிமை திருத்த சட்டத்திற்கான விதிகள் கடந்த பிப்ரவரியில்,வகுக்கப்படுவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் தெரிவித்தார்.இந்த விதிகளை வகுக்க மக்களவை மற்றும் மாநிலங்களவைகளுக்கு ஏப்ரல் 9 முதல் ஜூலை 9 வரை கால அவகாசம் வழங்கியதாக ராய் தெரிவித்தார்.

இதற்கிடையில்,உள்துறை அமைச்சர் அமித் ஷா,குடியுரிமை திருத்த சட்ட விதிகள் இன்னும் முழுமையாக வடிவமைக்கப்படவில்லை என்றும், கொரோனா தடுப்பூசி முடிந்ததும் சட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கிடையில்,கடந்த இரு தினங்களுக்கு முன்பு குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் 2009 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ்,இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.அதன்படி,சத்தீஸ்கார்,குஜராத், ராஜஸ்தான்,அரியானா மற்றும் பஞ்சாபில் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வசிக்கும் ஆப்கானிஸ்தான்,வங்காள தேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் புத்த மதத்தை சேர்ந்தவர்கள் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA) கீழ் குடியுரிமை பெற தகுதியுடையவர்கள் என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில்,சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்யக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைமையகத்தில்,சென்னை மண்டல செயலாளர் ஏ.கே.கரீம் தலைமையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்த போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மாநில செயலாளர் ரத்தினம், செயற்குழு உறுப்பினர் பசீர் சுல்தான், வர்த்தகர் அணி மாநில தலைவர் முகைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சி.ஏ.ஏ. சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் இதுகுறித்து,எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கூறுகையில்,”கொரோனோ தொற்றின் பேரழிவை கட்டுப்படுத்துவதில் அடைந்த படுதோல்வியை மறைத்து, மக்களின் கவனத்தை மத்திய மோடி அரசு திசை திருப்புகிறது,”,என்று தெரிவித்தனர்.

Recent Posts

தொடங்கியது மக்களவை தேர்தல் திருவிழா.. 102 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு.! 

Election2024 : 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல்…

13 mins ago

வெற்றியை தொடருமா சிஎஸ்கே ? லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியாக இன்று லக்னோ…

29 mins ago

இதுனால தான் இவர் லெஜண்ட்! கடைசி நேரத்தில் ரோஹித் சர்மா செய்த மாயாஜால வேலை!

ஐபிஎல் 2024 : கடைசி ஓவரில் ரோஹித் சர்மா செட் செய்த ஃபீல்டால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி…

48 mins ago

பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…

8 hours ago

எத்தன தடவ சொல்றது ? அந்த வீரருக்கு அட்வைஸ் கொடுத்த சூர்யகுமார் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…

11 hours ago

எம்மாடியோ! புஷ்பா 2 ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?

Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …

13 hours ago