2,000 தீக்குச்சியை கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை வடிவமைத்த ஓவியர்…!

2,000 தீக்குச்சியை கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை வடிவமைத்த ஓவியர்…!

மு.க.ஸ்டாலினை 2,000 தீக்குச்சியை கொண்டு தத்ரூபமாக வரைந்த ஓவியர்.

நாகர்கோவிலை சேர்ந்த அம்பிதாஸ் திரைப்படத்துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 8 வருடங்களாக அவர் பார்த்த வேலையை விட்டுவிட்டு, நாகர்கோவிலில் ஓவியராக பணியாற்றி வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் வேலை இல்லாமல் இருக்கும் அவரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு பணிகள் அவரை பெரிதும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில், அவர் மு.க.ஸ்டாலினை 2,000 தீக்குச்சியை கொண்டு தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். தீக்குச்சி மருந்து வெட்டி அகற்றி விட்டு, குச்சியை வாணலியில் போட்டு வறுத்து, கருப்பு நிறமாக மாற்றி, கருப்பு மற்றும் வெள்ளி தீக்குச்சியை பயன்படுத்தி, மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை வடிவமைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா காலகட்டத்தில் மக்களை காக்க முதல்வர் பாடும்கஷ்டங்களை பார்க்கும் போது, நமது சார்பில் எதாவது செய்ய வேண்டும் என்று, இந்த புகைப்படத்தை உருவாக்கியுள்ளேன். இதனை செய்து  முடிக்க ஒருவார காலம் தேவைப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube