இந்தியாவில் தற்போது நாம் எதிர்கொள்ளும் ஒரே பிரச்னை வேலையின்மை தான்-ராகுல் காந்தி

கடந்த நான்கரை ஆண்டுகளாக என் நாட்டில் சகிப்புத் தன்மையில்லாததை கூறுவதில் வருத்தமடைகிறேன்  என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறுகையில்,இந்தியாவில் தற்போது நாம் எதிர்கொள்ளும் ஒரே பிரச்னை வேலையின்மை தான். வேலையில்லா திண்டாட்டம் மட்டுமின்றி சீனாவுக்கும் சவால் விடும் நிலையை உருவாக்க வேண்டும். இந்தியா போன்ற ஒரு நாட்டை நாம் ஒருபோதும் இயக்க முடியாது.

ஒருவரின் சிந்தனையே சரி. மற்றவர்கள் கூறுவது தவறு என்கிறார்கள் என மோடி மீது ராகுல் மறைமுக விமர்சனம். கடந்த நான்கரை ஆண்டுகளாக என் நாட்டில் சகிப்புத் தன்மையில்லாததை கூறுவதில் வருத்தமடைகிறேன். அரசியல் காரணங்களுக்காக எனது அன்பான நாடு இந்தியா தற்போது பிரிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Leave a Comment