ஒற்றை தலைமை வேண்டும் என்ற ஒரே கருத்து ! வேகவேகமாக அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கை

ஒற்றை தலைமை வேண்டும் என்ற ஒரே கருத்து ! வேகவேகமாக அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கை

அண்மையில் அதிமுகவில் இரட்டை தலைமை கூடாது ,ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறிய அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவின் கருத்து பெறும் பரபரப்பை அக்கட்சிக்குள் ஏற்படுத்தியது.மேலும் மூத்த தலைவர்கள் அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் ஒற்றைத்தலைமை குறித்து கட்சியினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அதிமுக தொண்டர்களுக்கு  ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்  பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.



அதில்,அதிமுகவின் முடிவுகள் குறித்து தொண்டர்கள் பொதுவெளியில் பேசக்கூடாது.அதிமுகவின் செயல்பாடு பற்றி சிலர் வெளியிட்டு வரும் கருத்துகள் வரவேற்கத்தக்கவையாக இல்லை. கருத்துகளை கூற செயற்குழு, பொதுக்குழு என்று பல வாய்ப்புகள் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அதிமுக தொண்டர்களுக்கு கட்டுப்பாடும் ஒழுங்கும் கட்டாயம் தேவை. ஊடகங்கள் வாயிலாக, கருத்துகளை சொல்வதை தவிர்க்க வேண்டும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டுகோள் .அதிமுக எடுக்கும் முடிவுகள் பற்றி, பொதுவெளியில் கருத்து கூறக் கூடாது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube