ஒரே கிரிக்கெட்! ஒரே தலைவன்… செல்வராகவன்..!

இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி ஓய்வு குறித்து இயக்குனர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக நேற்று முன்தினம் தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தெரிவித்தார். அவர் ஓய்வு பெரும் செய்தி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

எல்லா நேரத்திலும் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராகவும், இந்தியாவுக்காக விளையாடிய மிகச் சிறந்த விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருக்கும் தோனி ஓய்வு பெற்றலாலும் அவர் செய்த சாதனைகள் அணைத்து அழிக்கமுடியாத ஒன்றாக தான் உள்ளது.

இந்நிலையில் தோனி குறித்து ரசிகர்கள் உட்பட பல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் அந்த வகையில் இயக்குனர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே கிரிக்கெட் ஒரே தலைவன் என்று தோனியின் புகைப்படத்தை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

ஒரே கிரிக்கெட்! ஒரே தலைவன்!

A post shared by Selvaraghavan (@selvaraghavan) on

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.