முதுபெரும் தமிழ் புலவரான இரா.இளங்குமரனார் அவர்கள் வயோதிகம் காரணமாக காலமானார்.
முதுபெரும் தமிழ் புலவரான இரா.இளங்குமரனார் அவர்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர் ஆவார்.
இவர் திருநெல்வேலி மாவட்டம் வளவந்தல்புரம் கிராமத்தில் 1927 ஆம் ஆண்டு,தந்தையார் படிக்கராமர், தாய் வாழவந்தம்மையார் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் தமிழில் பல நூல்களை எழுதியுள்ளார். அந்த வகையில் இவர் எழுதிய, திருக்குறள் கட்டுரை தொகுப்பு என்ற நூலை 1963ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு அவர்கள் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து சங்க இலக்கிய வரிசையில் புறநானூறு என்னும் நூலை 2003-ஆம் ஆண்டு அப்துல் கலாம் அவர்கள் வெளியிட்டார். இவர் தமிழில் 500-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இந்நிலையில், இவர், தனது 94-வது வயதில் மதுரை திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் வயோதிகம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
மீனாட்சி திருக்கல்யாணம் -இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இங்கே காணலாம். மதுரை சித்திரை திருவிழாவின் அனைவரும் எதிர்பார்த்து ஆவலோடு…
Congress Protest : பிரதமர் மோடி பெங்களூரு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக காங்கிரஸார் சொம்பு வைத்து போராட்டம் செய்து வருகின்றனர். கடந்த 2019 தேர்தலிலும், 2024…
TRB: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதாற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)…
கம்மங்கூழ் -கம்மங்கூழை வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் கம்மங்கூழும் ஒன்று. 15 வருடங்களுக்கு முன்பு அனைவரது வீடுகளிலுமே…
Manish Sisodia: மணீஷ் சிசோடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவு. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ்…
BJP : கடந்த 10 ஆண்டுகளில் பாஜக கட்சியானது தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதள விளம்பரங்களுக்கு 3,641 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஆளும் பாஜக அரசு…