#BREAKING : 11,12 ஆம் வகுப்புகளில் பழைய பாடத்திட்டமே தொடரும் – அரசு அறிவிப்பு

தமிழகத்தில் மேல்நிலைக் கல்வியில் புதிய பாடதிட்டங்கள் அறிமுகப்படுத்தி ஆணை வெளியிட்டதை ரத்து செய்தது தமிழக அரசு. 2020-2021-ஆம் கல்வியாண்டியிலிருந்து 4 பாடத்தொகுப்பு முறையே நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள, மாநில பொதுக்கல்வி வாரிய நிர்வாகக் குழுவின் அறிக்கையின் அடைப்படையில் ,மேல்நிலை கல்வி பையிலும் மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தை பிக்கும் வகையில் வேலைவாய்ப்பிற்கு ஏற்றதாக படத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி நடைமுறையிலுள்ள 4 முதன்மை படத்தொகுப்புகளுடன் சேர்த்து புதிய வழிமுறைகளுடன் கூடிய 3 முதன்மை படத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தி ,மாணவர்கள் 3 முதன்மை படத்தொகுப்பினையோ அல்லது 4 படத்தொகுப்பினையோ தேர்வு செய்து கொள்ளும் வகையில் 2020-2021 ஆம் கல்வியாண்டு முதல் இதனை நடைமுறைப்படுத்த ஆணை வெளியிடப்பட்டது.

ஆனால் இதற்கு பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.  எனவே புதிய முறை ரத்து செய்யப்படுகிறது.  2020 – 21ஆம் கல்வியாண்டில் இருந்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத் தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை மட்டும் அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.