சர்க்கார் பட பாணியில் வாக்களித்த முதியவர்….!

வேளச்சேரி தொகுதியில், 75 வயது முதியவர் ஒருவரின் வாக்கு கள்ளஓட்டாக பதிவாகியுள்ளது. 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, காலை முதலே மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வேளச்சேரி தொகுதியில், 75 வயது முதியவர் ஒருவர், வாக்களிக்க சென்ற போது, அவரது ஓட்டு பதிவாகிவிட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

தனது ஒட்டு கள்ளஓட்டாக பதிவு செய்யப்பட்டதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், தான் வாக்களிக்க  வேண்டும் என முறையிட்டுள்ளார். இதனையடுத்து, அந்த முதியவரை, 49’p’ முறையில், முதியவரை வாக்களிக்க அதிகாரிகள் அனுமதித்தனர். இந்த முறைப்படி அளிக்கப்படும் வாக்குகள் பொதுவாக எண்ணப்படாது. மிக  குறைந்த அளவு வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் வெற்றி பெறும் பட்சத்தில் மட்டுமே இந்த வாக்குகள் எண்ணப்படும். தனது 70 வயது அனுபவத்தில், இதுபோல் எனது வாக்கை யாரும் கள்ளஓட்டாக போட்டதில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.