உத்தரகண்ட்டில் கொரோனா நோயாளியின் தொலைபேசியை செவிலியர் திருடியதாகக் கூறப்படுகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் ருகையா என்ற செவிலியர் ஒருவர் கொரோனா நோயாளியிடம் இருந்தது அவரது தொலைபேசியை அவர் இறந்த பிறகு திருடினார் என கூறப்படுகிறது. இதனையடுத்து, இறந்த நபரின் மகனான அமன்தீப் கில் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், தனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த மே 8-ஆம் தேதி அன்று உயிரிழந்தார். அவருடைய தொலைபேசி திருடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அமன்தீப் கில் புகாரை ஏற்ற காவல்துறையினர் உடனடியாக விசாரணையில் இறங்கினர், விசாரணையில் தொலைபேசியை சல்மான் அகமது என்பவர் வைத்திருந்தது தெரியவந்தது. அகமதுவைப் பிடித்து விசாரணை நடத்தியதில் சல்மான் அகமது ருகையாவிடம் இருந்து தொலைபேசி வாங்கியதாக கூறினார்.
பின்னர், ருகையாவை பிடித்து விசாரணை செய்ததில் கொரோனா நோயாளிடமிருந்து தொலைபேசியை திருடியதாக ஒப்புக்கொண்டார். திருடிய தொலைபேசியை மறுநாளே தனது நண்பர் சல்மானிடம் கொடுத்ததாகவும், மேலும், மருத்துவமனையில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தையும் திருடியாதாக ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து, ருகையாவை போலீசார் கைது செய்தனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…