கர்நாடகாவில் பாதிப்பு எண்ணிக்கை 47,000-ஐ கடந்தது.. ஒரே நாளில் 87 பேர் உயிரிழப்பு.!

கர்நாடகாவில் பாதிப்பு எண்ணிக்கை 47,000-ஐ கடந்தது.. ஒரே நாளில் 87 பேர் உயிரிழப்பு.!

கர்நாடகா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 3,176 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,253 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 3,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,253 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் மேலும் இதுவரை இல்லாத அளவில் நேற்று 87 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 928 அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஒரே நாளில் 1,076 பேர் நேற்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 18,466 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 27,853 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube