தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,98,231ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,98,231ஆக உயர்வு!

தமிழகத்தில் இதுவரை கொரோனவால்  பாதித்தோரின் எண்ணிக்கை 34,47,006 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இந்தாண்டு தொடக்கம் முதல் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் நேற்று புதிதாக 618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 34,47,006 ஆக அதிகரித்துள்ளது.  அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 2,153 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 33,98,231-ஆக அதிகரித்துள்ளது. கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆகும், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,993ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10,782 ஆக அதிகரித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube