ஸ்பெயினில் 25 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – அச்சத்தில் ஸ்பெயின் மக்கள்!

கொரோனா வைரஸால் ஸ்பெயினில் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்துள்ளதால், ஸ்பெயின் மக்கள் அதிர்ச்சி. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்த வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 3,566,230 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 248,285 பேர் உயிரிழந்துமுள்ளனர். 

இந்நிலையில், இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஸ்பெயினும் உள்ளது. இதுவரை ஸ்பெயினில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 247,122 பேராக உள்ளது. 148,558 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 

இருப்பினும், இதுவரை ஸ்பெயினில் இந்த வைரஸால் உயிரிழந்தவர்கள் மட்டும் 25,264 பேர். எனவே, மக்களை காட்டிலும் அரசாங்கம் மிகவும் அதிர்ந்து போய் உள்ளதாம். மேலும், 2,386 பேர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர்.  

author avatar
Rebekal